ஆப்நகரம்

தொடங்கியது தசரா கொண்டாட்டம்; வடமாநிலங்களில் ராவணன் உருவபொம்மை எரிப்பு!

புதுடெல்லி: தசரா கொண்டாட்டத்தை ஒட்டி, ராவணன் உருவபொம்மையை எரித்து பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 18 Oct 2018, 10:16 pm
வட மாநிலங்களில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் முப்பெரும் தேவிகளை வணங்கி வழிபாடு நடத்துவர். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Dasara


இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. தீமை அழிந்து நன்மை பெருகும் என்பதை வலியுறுத்தும் நிகழ்வாக கருதப்படுகிறது.

இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராவணன், கும்ப கர்ணன், மேக்நாத் ஆகியோரின் உருவ பொம்மைகளுக்கு தீ வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

அதேசமயம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தசரா விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அங்கு ராவணனின் 10 தலைகள் கொண்ட உருவ பொம்மையை உருவாக்கி வருகின்றனர்.

Effigy of Ravan burnt due to Dasara festival in North India.

அடுத்த செய்தி