ஆப்நகரம்

காருக்கு அடியில் இப்படியொரு ஷாக்; வரிசை கட்டி நின்ற வாகனங்கள்!

பரபரப்பான சாலையில் காருக்கு அடியில் நீண்ட மலைப்பாம்பு கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Samayam Tamil 22 Sep 2020, 8:31 am
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நேற்று காலை பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சோமையா மைதான் பகுதியில் இருந்து 8 அடி நீள மலைப்பாம்பு ஒன்று வந்தது. இது சாலையில் நின்று கொண்டிருந்த காருக்கு அடியில் சென்றது. இதையடுத்து சக்கரத்தில் நன்றாக சுற்றிக் கொண்டது. பின்னர் காரை எடுக்க முயன்ற ஓட்டுநரால் சக்கரத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்தார். இதனால் காரை அப்படியே சாலையில் நிறுத்திவிட்டார்.
Samayam Tamil Snake under Car


இதன் காரணமாக பின்னால் வந்த வாகனங்கள் அனைத்தும் அப்படியே நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து காருக்கு அடியில் சோதித்து பார்க்கையில் மலைப்பாம்பு ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது.

நள்ளிரவு சோகம்; இடிந்து விழுந்த 3 மாடிக் கட்டடம் - பலர் பலியானதால் அதிர்ச்சி!

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், உடனே அப்பகுதியில் இருந்த மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாம்பு பிடிக்கும் நபர்கள் அழைக்கப்பட்டனர். பின்னர் அபிருப் காடம், சித்தார்த் கெய்க்வாட், சுனில் காடம் ஆகிய பாம்பு பிடிக்கும் நபர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் பாம்பை மீட்டனர். இதனை ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று பார்வையிட்டனர். அந்த பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்று அருகிலுள்ள வனப்பகுதியில் விட்டனர்.

இந்நிலையில் காருக்கு அடியில் நுழைந்து கொண்ட மலைப்பாம்பு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அடுத்த செய்தி