ஆப்நகரம்

கொச்சி மெட்ரோவில் பணியை ராஜினாமா செய்த 8 திருநங்கைகள்

கொச்சி மெட்ரோவில் வேலைபார்த்த 8 திருநங்கைகள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

TNN 26 Jun 2017, 12:57 pm
கொச்சி மெட்ரோவில் வேலைபார்த்த 8 திருநங்கைகள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
Samayam Tamil eight transgender employees quit working for kochi metro in kerala
கொச்சி மெட்ரோவில் பணியை ராஜினாமா செய்த 8 திருநங்கைகள்


சமீபத்தில் பிரதமர் மோடி கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். கொச்சி மெட்ரோவில் தான் அதிகப்படியாக 21 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்பட்டது. ஆனால், கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய ஒரு வாரத்திற்குள் எட்டு திருநங்கைகள் பணியை ராஜினாமா செய்துவிட்டனர். பணியின் போது அவர்கள் கொச்சி நகரில் தங்குவதற்கு வாடகைக்கு வீடு தர மறுப்புதால் இந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு அவர்களின் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.



வாடகைக்கு வீடு தர மறுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர், கொச்சி மேயர் ஆகியோரிடம் திருநங்கைகள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக எடப்பள்ளி ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் முதுநிலை பட்டதாரியான ரகா ரஞ்ஜினி கூறுகையில், தற்போது 15 ஆயிரம் வாங்கும் எனக்கு வீடு கிடைக்காத நிலையில், லாட்ஜ்ஜில் வாங்குகிறேன். அதன் வாடகை ஒரு நாளைக்கு ரூ.600.

இந்த சூழலில் என்னால் எப்படி வேலைபார்க்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், இது தொடர்பாக கொச்சி மெட்ரோ நிறுவனம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் போது மேலும், 20 திருநங்கைகளை பணிக்கு அமர்த்தும் முடிவும் இருக்கிறது. இந்நிலையில், அவர்களைப் பணிக்கு அமர்த்துவது பெரிய விஷயம் அல்ல. அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அரசு செய்து தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.a

அடுத்த செய்தி