ஆப்நகரம்

மைனர் காதல்: சிறுவர், சிறுமி பத்திரமாக மீட்பு

அகமதாபாத் அருகே பள்ளி படிக்கும் சிறுவனும், சிறுமியும் காதலித்து ஓடிப்போன சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 29 Jul 2016, 6:27 pm
அகமதாபாத்: அகமதாபாத் அருகே பள்ளி படிக்கும் சிறுவனும், சிறுமியும் காதலித்து ஓடிப்போன சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ek chhoti si love story safe ending
மைனர் காதல்: சிறுவர், சிறுமி பத்திரமாக மீட்பு


அகமதாபாத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மதிக்கத்தக்க சிறுவனும், சிறுமியும் கடந்த புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர்களது பெற்றோர் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில் மறுநாள் பிற்பகல் நாடியாத் அருகே இருவரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அளித்த போலீசார்,'அணில்-ஜோதி இருவரும் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். இருவரது பெற்றோர்களும் கிழக்கு அகமதாபாத்தில் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை பள்ளிக்குச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என அவர்களது பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து அணிலின் மொபைல் போன் சிக்னலை போலீசார் பின்தொடர முயற்சித்துள்ளனர். ஆனால் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்ததால் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே, இருவரும் பல இடங்களில் தங்க முயற்சித்த நிலையில் வயது, பள்ளி சீருடை காரணமாக இருவருக்கும் எங்கும் இடம்கிடைக்கவில்லை. ஆகையால் நண்பர் ஒருவரது வீட்டிற்குச் சென்று இருவரும் உடை மாற்றிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அணிலின் மொபைல் போன் மறுநாள் மதியம் நாடியாத் அருகே ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டதில், போலீசார் அவர்கள் இருக்கும் இடத்தை பெற்றோர்களுக்கு தெரிவித்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு சிறுவனையும், சிறுமியையும் பத்திரமாக அவர்களது பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

அடுத்த செய்தி