ஆப்நகரம்

இடைத்தேர்தல் அறிவிப்பு; கர்நாடகாவிற்கு ஒரு நியாயம், தமிழகத்திற்கு ஒரு நியாயமா?

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் சட்டசபை மற்றும் மக்களவை இடைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Oct 2018, 4:51 pm
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, வரும் ஜனவரியுடன் சட்டசபை பதவிக் காலம் நிறைவடைய உள்ள சத்தீஸ்கருக்கு நவம்பர் 12, நவம்பர் 20 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
Samayam Tamil EC


இதேபோல் மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 28ஆம் தேதியும், ராஜஸ்தானிற்கு டிசம்பர் 7ஆம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் முன்கூட்டியே சட்டசபை கலைக்கப்பட்ட தெலுங்கானாவிற்கும் டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது.

Assembly elections 2018: 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு: வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகள் ராம்நகர், ஜமாகண்டி ஆகியவற்றிற்கு நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோல் காலியாக உள்ள மக்களவை தொகுதிகளான ஷிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகியவற்றிற்கும் நவம்பர் 3ஆம் தேதியே இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இவற்றின் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் இடைத்தோ்தல் தேதி பின்னா் அறிவிக்கப்படும் – ஓ.பி.ராவத்

ராம்நகர் தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமி போட்டியிட்டார். அவர் ஏற்கனவே சன்னபட்டனா தொகுதியில் வெற்றி பெற்றதால், ராம்நகர் தொகுதியை ராஜினாமா செய்தார். ஜமாகண்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ சித்து நியாமகவுடா விபத்தில் பலியானதால், அந்த தொகுதியும் காலியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.

Election Commission announces Karnataka assembly and lok sabha by-election dates today.

அடுத்த செய்தி