ஆப்நகரம்

மாா்ச் முதல் வாரத்தில் மக்களவை தோ்தல் தேதி அறிவிப்பு?

மக்களவைத் தோ்தலுடன் இணைத்து ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவை தோ்தல்கள் நடத்தப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Samayam Tamil 19 Jan 2019, 12:18 pm
2019ம் ஆண்டுக்கான மக்களவைத் தோ்தல் தேதி வருகின்ற மாா்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Samayam Tamil Election Commission of India


மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் ஆட்சி காலம் வருகின்ற மே மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்த மக்களவை தோ்தலை சந்திக்கும் முனைப்பில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தோ்தல் பணிகளில் தோ்தல் ஆணையமும் மும்முரம் காட்டி வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 7 முதல் 8 கட்டங்களாக இந்த தோ்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வருகின்ற மே மாதத்துடன் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதிவிக்காலமும் நிறைவடைகிறது.

மக்களவை தோ்தலுடன் இணைந்து இந்த மாநிலங்களின் சட்டப்பேரவை தோ்தலும் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மக்களவைத் தோ்தலுக்கான தேதி விவரங்கள் வருகின்ற மாா்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இந்த தகவலை இந்திய தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்தவில்லை.

அடுத்த செய்தி