ஆப்நகரம்

விமான நிலையத்தில் தேர்தல் ஆணையரின் பை திருட்டு

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பை திருடப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Sep 2018, 3:56 pm
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பை திருடப்பட்டுள்ளது.
Samayam Tamil bloombergquint%2F2017-08%2F735acdd6-48d1-428a-931f-6231cdedb44a%2Fsunil arora_election commissioner


சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த 4 மாநிலங்களில் உள்ள அரசுகளின் ஆட்சிக்காலம் டிசம்பர் 15, 2018 முதல் ஜனவரி 20, 2019 க்குள் முடிகின்றன.

வரும் அக்டோபர் மாத இறுதியிலோ நவம்பர் மாதத் தொடக்கத்திலோ தேர்தல் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் சுனில் அரோரா, அசோக் லவாசா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வுசெய்ய சென்றுள்ளனர்.

இரண்டு நாட்கள் இந்த ஆய்வு நடைபெறும். இதற்காக இன்று விமானம் மூலம் மூவரும் ஜெய்ப்பூர் வந்தனர். ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இறங்கியபோது தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பை திருடப்பட்டிருக்கிறது. இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி