ஆப்நகரம்

துணை ஜனாதிபதி தேர்தல்: எம்.பிக்கள் இன்று வாக்களிப்பு!

நாட்டின் 15வது துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடக்கிறது.

TOI Contributor 5 Aug 2017, 10:49 am
புதுடெல்லி: நாட்டின் 15வது துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடக்கிறது.
Samayam Tamil election to decide indias 15th vice president will be held on today
துணை ஜனாதிபதி தேர்தல்: எம்.பிக்கள் இன்று வாக்களிப்பு!


இந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஹமீன் அன்சாரி கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகிக்கிறார். அவரது பதவிக் காலம் முடிவடைவதால் தற்போது தேர்தல் நடக்கிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.,வின் வேட்பாளராக வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார்.


துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடக்கிறது. இதில் பிரதமர் மோடி முதல் நபராக வாக்களித்தார். எதிர்கட்சிகளின் வேட்பாளரான போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி வாக்களித்தார்.

இந்நிலையில் வாக்களித்து வந்த மோடி, கோபால கிருஷ்ண காந்தி உள்ளிட்டோர் கட்சி பேதமின்றி ஒன்றாக பேசிக்கொண்டிருந்தனர்.

இதற்கென நாடாளுமன்ற வளாகத்தில் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு சீட்டு மூலம் அனைவரும் வாக்களிப்பர். இன்று மாலை 5 மணிவரை இந்த வாக்கு பதிவு நடக்கும். இதன் முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும்.



தற்போதைய நிலையில் பா.ஜ.க.., அதன் கூட்டணி கட்சியின் எம்.பி.,க்கள் 550 பேர் உள்ளனர். இதனால் வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி தேர்தலில் வெல்வது கிட்டத்தட்ட உறுதி என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

election to decide India's 15th Vice President will be held on today.

அடுத்த செய்தி