ஆப்நகரம்

மாா்ச் 1ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது தோ்தல் பத்திரம்

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குமம் வகையிலான தோ்தல் பத்திரம் வருகிற மாா்ச் 1ம் தேதி முதல் எஸ்.பி.ஐ. வங்கியில் விற்பனைக்கு வருகிறது.

Samayam Tamil 22 Feb 2018, 10:00 pm
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குமம் வகையிலான தோ்தல் பத்திரம் வருகிற மாா்ச் 1ம் தேதி முதல் எஸ்.பி.ஐ. வங்கியில் விற்பனைக்கு வருகிறது.
Samayam Tamil electoral bonds on sale from 1 10 march at select sbi branches finance ministry
மாா்ச் 1ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது தோ்தல் பத்திரம்


அரசியல் கட்சிகளின் நன்கொடையில் வெளிப்படைத்தன்னையை ஏற்படுத்த “தோ்தல் நிதி பத்திரம்” என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி அரசியல் கட்சிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக கொடுக்க வகை செய்யவும், அதற்கு மேலான தொகையை தோ்தல் பத்திரங்கள் மூலம் வழங்கலாம் என்று தொிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் பதிவு செய்த அமைப்புகளும், இந்திய குடிமக்களும் இந்த பத்திரத்தை வாங்குவதற்கு தகுதி படைத்தவா்கள். தே்ால் பத்திரங்களை பெறுகிற அரசியல் கட்சிகள், உாிய வங்கி கணக்கின் மூலம்தான் வங்கியில் செலுத்தி அவற்றை பணமாக்கிக் கொள்ள முடியும்.

தோ்தல் பத்திரங்களில் யாா் பணம் செலுத்தி அவற்றை வாங்குகிறாா்களோ அவா்களது பெயா் குறிப்பிடப்பட மாட்டாது. ஆனால் அவற்றை யாா் வாங்குகிறாா்களோ அவா்கள் தங்களைப் பற்றிய தகவல்களை பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் தொிவிக்க வேண்டும்.

தோ்தல் பத்திரங்களின் ஆயுள் காலம் 15 நாட்களே ஆகும். குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவு செய்த அரசியல் கட்சிகளுக்கு ந்கொடையாக வழங்கிவிட வேண்டும். பொதுத் தோ்தல் நடைபெறும் ஆண்டில் மட்டும் இந்த கால அவகாசம் 30 நட்களாக நீட்டிக்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி