ஆப்நகரம்

சம்பளம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நீரவ் மோடியின் ஊழியர்கள்!!

பிஎன்பி வங்கியில் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நீரவ் மோடியின் சூரத் நகைக்கடையில் ஊழியர்கள் சம்பளம் வழங்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்

Samayam Tamil 23 Feb 2018, 1:17 am
பிஎன்பி வங்கியில் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நீரவ் மோடியின் சூரத் நகைக்கடையில் ஊழியர்கள் சம்பளம் வழங்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil employees of nirav modis jewellery unit at surat sez sat on dharna on thursday demanding payment of their wages
சம்பளம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நீரவ் மோடியின் ஊழியர்கள்!!


குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி உலகம் முழுவதும் பல இடங்களில் தனது நகைக்கடைகளை வைத்துள்ளார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, 31-ம் தேதி அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் தேடப்படுவதாக ஜனவரி 31ம் தேதியே சி.பி.ஐ. அறிவித்தது. ஆனால் கடந்த ஜனவரி 1-ம் தேதியே நீரவ்மோடி நாட்டைவிட்டு வெளியேறியதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்களையும், தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

இந்நிலையில், நீரவ் மோடிக்கு சொந்தமான சூரத் நகைக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி