ஆப்நகரம்

ஓபி அடிக்கும் எம்எல்ஏக்கள்: வெறிச்சோடிய சட்டப்பேரவை

கர்நாடக மாநில சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் வெறும் 10 சதவீதம் எம்எல்ஏக்கள் மட்டுமே அவைக்கு வந்தனர்.

TNN 14 Nov 2017, 11:49 pm
கர்நாடக மாநில சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் வெறும் 10 சதவீதம் எம்எல்ஏக்கள் மட்டுமே அவைக்கு வந்தனர்.
Samayam Tamil empty chairs greet speaker on day 1 of winter session
ஓபி அடிக்கும் எம்எல்ஏக்கள்: வெறிச்சோடிய சட்டப்பேரவை


கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று சட்டப்பேரவைக்கு முக்கால் வாசிக்கும் அதிகமான எம்எல்ஏக்கள் வராமல் ஓபி அடித்துவிட்டனர்.

மொத்தம் 224 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 22 பேர் மட்டும் சரியாக 11 மணிக்குள் வருகை தந்தனர். குறைந்தது 24 பேராவது அவைக்கு வந்தால் மட்டுமே அவை நடவடிக்கைகளை நடத்த முடியும். இதனால், சபாநாயகர் கே.பி.கோலிவாட் அவையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

பின்னர், முதல்நாள் அவை கலைவதற்குள் ஒவ்வொருவராக சிலர் தலைகாட்டினர். கடைசியில் முதல்நாள் முடிவில் 80 பேர் மட்டுமே வருகை தந்துள்ளனர்.

வருகை தந்த எம்எல்ஏக்களில் ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் 6 பேரும் பாஜகவினர் 15 பேரும் காங்கிரஸ் கட்சியினர் 51 பேரும அடங்குவர்.

அடுத்த செய்தி