ஆப்நகரம்

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை பலி

70க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்த கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை மூளை அழற்சி நோயால் இறந்துள்ளது.

TNN 14 Aug 2017, 7:52 pm
கோரக்பூர்: 70க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்த கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை மூளை அழற்சி நோயால் இறந்துள்ளது.
Samayam Tamil encephalitis claims the life of an 8 year old being treated at gorakhpurs brd medical college
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை பலி


உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 70க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தனர். மூளை அழற்சி சிகிச்சை பெற்று வந்த அந்த பிஞ்சுக் குழந்தைகள் இறப்புக்குக் காரணம் மருத்துவமனையில் சிகிச்சைக்குத் தேவையான திரவ ஆக்சிஜன் இல்லாததே என்று தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இத்துயரச் சம்பவத்திற்கு அம்மாநில அரசின் அலட்சியமே காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, அம்மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
#FLASH Encephalitis claims the life of an 8-year old, being treated at #Gorakhpur's BRD Medical College. pic.twitter.com/DXFyuJeSon — ANI UP (@ANINewsUP) August 14, 2017 இந்நிலையில், அதே அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு 8 வயது குழந்தை மூளை அழற்சிக்கு சிகிச்சை பெற்றுவந்த போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி