ஆப்நகரம்

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டி கணவருக்கு சம்மன்

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு பிட்காயின் மோசடி தொடர்பாக அமலாகத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 5 Jun 2018, 7:05 pm
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு பிட்காயின் மோசடி தொடர்பாக அமலாகத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
Samayam Tamil 64462862


பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. லண்டனில் பிறந்த இவர் ரியல் எஸ்டேட் உட்பட பல தொழில்கள் செய்துவருகிறார்.

இந்நிலையில், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் பரிவர்த்தனை மோசடியில் ராஜ் குந்தராவுக்கு சம்பந்தம் இருப்பதாக அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை அவருக்கு சம்மன் அனுப்பினர்.

8,000 முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ.2,000 கோடி மதிப்புக்கு கெயின் பிட்காயின் நிறுவனம் மோசடி செய்துள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பண மோசடி வழக்கு ஒன்றை அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்தது. தொடர்ந்து, கெயின் பிட்காயின் நிறுவனத்தின் நிறுவனர் அமித் பரத்வாஜ் கைதார்.

இந்த விவகாரத்தில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி