ஆப்நகரம்

கடவுளே கேட்டாலும் மன்னிக்க மாட்டேன்; கோபத்தின் உச்சியில் நிற்கும் நிர்பயா தாய்!

என் மகளை சீரழித்த கொடூர மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை நான் ஏன் மன்னிக்க வேண்டும் என்று நிர்பயாவின் தாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 19 Jan 2020, 2:05 pm
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
Samayam Tamil Asha


இந்த சம்பவத்தில் தொடர்புடைய அக்‌ஷய், பவன், முகேஷ், வினய் ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனையை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்ற தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தப்பு பண்ணிட்டீங்களே கேரள மக்களே; இப்படியொரு அதிர்ச்சி தந்த ராமச்சந்திர குகா!

இந்த சூழலில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ட்விட்டரில் முக்கிய பதிவொன்றை இட்டிருந்தார். அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பின்பற்றி நிர்பயாவின் தாய் ஆஷா தேவியும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக ஆஷா தேவியிடம் கேள்வி எழுப்புகையில், நீதி நிலைநாட்டப்படாத காரணத்தால் தான் இதுபோன்ற கருத்துகள் கூறப்படுகின்றன. இதுவரை அரசியலை பற்றி நான் எதுவும் பேசியது இல்லை.

கெஜ்ரிவாலுக்கு எதிராக நிர்பயா தாய் போட்டியா?- காங்கிரஸ் திட்டம் உண்மை தானா!

2012ஆம் ஆண்டு எனது மகளுக்கு நீதி கேட்டு தெருவில் இறங்கி போராடியவர்கள், தற்போது அரசியல் ஆதாயத்திற்காக செயல்படுகின்றனர். யார் அந்த வழக்கறிஞர்? எனக்கு எப்படி அறிவுரை வழங்கலாம்? கடவுளே கேட்டாலும் நான் மன்னிக்க மாட்டேன்.

அவர்களும் ஒரு பெண் தான். என்னுடைய நிலையில் இருந்து யோசித்து பார்க்க வேண்டும். அவர்கள் அப்படி பேசியது எனக்கு மிகவும் வருத்தாக இருக்கிறது. மனித உரிமைகள் என்ற பெயரில் பணம் சம்பாதிக்கும் வேலையில் தான் சிலர் ஈடுபடுகின்றனர்.

24x7 திறந்திருக்கும் மால்கள், உணவக விடுதிகள், மல்டிபிளக்ஸ்கள் - மாநில அரசு அதிரடி!

எனக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை. அவர் பெண் இனத்திற்கே ஒரு அவமானம் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி