ஆப்நகரம்

மின்வாக்கு இயந்திரங்களில் பாஜக தில்லுமுல்லு : ஹர்திக் பட்டேல் பகிரங்க குற்றச்சாட்டு

மின் வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்து பாஜக வெற்றியைப் பெற்றுள்ளது என்று படிதார் அனமத் அந்தோலன் சமிதி தலைவர் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 18 Dec 2017, 3:43 pm
மின்வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்து பாஜக வெற்றியைப் பெற்றுள்ளது என்று படிதார் அனமத் அந்தோலன் சமிதி தலைவர் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil evm hacking led to bjp win says hardik patel
மின்வாக்கு இயந்திரங்களில் பாஜக தில்லுமுல்லு : ஹர்திக் பட்டேல் பகிரங்க குற்றச்சாட்டு


குஜராத் மாநில தேர்தலில் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தவர்களில் முக்கியமானவர் ஹர்திக் பட்டேல். இவருக்குப் பின்னர் பட்டேல் இனத்தவர்கள் 35 சதவீதத்தினர் அணிவகுத்து நின்றதுதான் பாஜகவின் பயத்திற்கு காரணம். உண்மையில் ஹர்திக் மற்றும் தலித் தலைவராக உருவெடுத்து இருக்கும் ஜிக்னேஷ் மேவானியும் தான் மோடிக்கு பயங்கர சவால்களை விடுத்து இருந்தனர். இவர்கள் பாஜகவுக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். உண்மையில் குஜராத்தில் இது பாஜகவுக்கு நடுக்கத்தை கொடுத்து என்றே கூற வேண்டும்.
There has been tampering in EVMs in Surat,Rajkot and Ahmedabad, hence the gap is very less wherever tampering happened. EVMs are hackable: Hardik Patel pic.twitter.com/cPNaItPrbw — ANI (@ANI) December 18, 2017 தேர்தலில் பாஜக 98 இடங்களில் முன்னிலை வகிக்கும்போது, பேட்டியளித்த ஹர்திக் பட்டேல் கூறுகையில், ''மின்வாக்கு இயந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்தி பாஜக குஜராத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. சூரத், ராஜ்கோட், அகமதாபாத் ஆகிய இடங்களில் பாஜக மின்வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. அவர்களது வெற்றி என்பது வெறும் சொற்ப வெற்றிதான்'' என்றார்.

அடுத்த செய்தி