ஆப்நகரம்

பெட்ரோல், டீசல் மீதான வரி ஏற்றம்: ஆனால் வாகன ஓட்டிகள் 'டோன்ட் ஒரி' !!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 6 May 2020, 12:14 am
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தின் விளைவாக அரசின் வரி வருவாய் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil petrol


பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, தமிழக அரசு வாகன ஓட்டிகளுக்கு சன்டே ஷாக் (மே 3) கொடுத்தது, இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் 2.50 ரூபாயும் அதிகரித்துள்ளது.

கொரோனா காலத்தில் வாகன ஓட்டிகளுக்கு இப்படியொரு அதிர்ச்சியளித்துள்ள தமிழக அரசு!!

இந்த நிலையில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 13 ரூபாயும் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு செவ்வாய்கிழமை (மே 5) நள்ளிரவு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த வரி ஏற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ள மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த வரி ஏற்றத்தால் பெட்ரோல், டீசலுக்கான சில்லறை விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், இந்த வரி உயர்வின் மூலம் கிடைக்கும் வருவாய் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி