ஆப்நகரம்

வாகனக் கட்டுப்பாட்டை அனுமதிக்க டெல்லி அரசு வேண்டுகோள்

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான ஒற்றைப்படை இரட்டைப்படை வாகனப்பதிவெண் கட்டுப்பாட்டை அமல்படுத்துவது குறித்து டெல்லி அரசு மீண்டும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

TNN 15 Nov 2017, 5:05 am
டெல்லி: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான ஒற்றைப்படை இரட்டைப்படை வாகனப்பதிவெண் கட்டுப்பாட்டை அமல்படுத்துவது குறித்து டெல்லி அரசு மீண்டும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Samayam Tamil exempt 2 wheelers women from odd even for 1yr delhi to ngt
வாகனக் கட்டுப்பாட்டை அனுமதிக்க டெல்லி அரசு வேண்டுகோள்


டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனை முன்னிட்டு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும் என்றும் செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை பதிவு எண் கொண்ட வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்தது.

ஆனால் இந்த அறிவிப்பு அமலாவதற்கு முன்பு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதற்கு அளிக்கப்பட்ட விதிவிலக்குகள் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், டெல்லி அரசு தனது திட்டத்தில் பின்வாங்கியது. பின்னர், இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான மனுவில், ஓராண்டிற்கு வாகனக் கட்டுப்பாட்டில் பெண்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் அல்லது நகரில் 2000 அரசுப் பேருந்துகள் புழக்கத்திற்கு வரும் வரையாவது விதிவிலக்குகளை அனுமதிக்க வேண்டும் என்று அரசு கோரியுள்ளது. மேலும், டெல்லியின் அண்டை மாநிலங்களும் இத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி