ஆப்நகரம்

திரையரங்குகளில் தேசிய கீதம்: மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது, எழுந்து நிற்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 10 Dec 2016, 8:42 am
புதுதில்லி: திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது, எழுந்து நிற்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil exemption for disabilities in theatres while singing national anthem
திரையரங்குகளில் தேசிய கீதம்: மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு


நாடு முழுவதும் திரையரங்குகளில் படக் காட்சி திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும். அவ்வாறாக திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைக்கும்போது பொதுமக்கள் அரங்கில் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். தேசிய கீதம் இசைக்கப்படும்போது திரையில் தேசியக் கொடியை திரையிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்தது.

இந்நிலையில் இந்த உத்தரவில் திருத்தும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது, மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை என்று உத்தரவிட்டது.

மேலும், தேசிய கீதம் இசைக்கப்படும் போது திரையரங்கின் கதவு பூட்டப்பட்டிருக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவையும் திருத்தி, திரையரங்கின் கதவுகள் பூட்டப்பட வேண்டியதில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Exemption for Disabilities in Theatres while singing National Anthem

அடுத்த செய்தி