ஆப்நகரம்

அதி தீவிர மழை எச்சரிக்கை- அதுவும் 3 மாவட்டங்களுக்கு; உஷாரா இருங்க மக்களே...!

அண்டை மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Samayam Tamil 14 Aug 2019, 7:58 am
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த சோகத்தின் தடயங்கள் மறைவதற்குள், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
Samayam Tamil Kerala Rains


கடந்த 8ஆம் தேதி முதல் பெய்த கன மழை காரணமாக, அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Also Read: கர்நாடக மாநிலத்தில் பெருமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு!

மேலும் 40 பேரைக் காணவில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2.52 லட்சம் பேர் 1,332 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார். அவர் மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

Also Read: வாயைப் பிளந்த பெரிய முதலை- அதுவும் வீட்டுக் கூரையில்... மழையால் நடந்த பயங்கரம்!

இந்நிலையில் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருகிறது.

இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது.

Also Read: காஷ்மீரில் எங்க நடவடிக்கை இனிமே இப்படித்தான்- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

அடுத்த செய்தி