ஆப்நகரம்

Fact Check: மோடியை தேசத்துரோகி என்று அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னாரா?

“இல்லை இல்லை. நான் அப்படிச் சொல்லவே இல்லை. இதுவரைசொன்னதும் இல்லை” என்று பதில் சொன்னார் அரவிந்த கெஜ்ரிவால். அது உண்மையா?

டெல்லி தேர்தல் எதிர்வரும் பிப்.8 ஆம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதல்வர் பதவிக்காகப் போட்டியிடுகின்றன. இந்த பிரச்சாரக்களத்தில் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்கிறார் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்று சமூக வலைதளங்களில் காணொலிகள் பரவி வருகின்றன.
Samayam Tamil arwind kejriwal


அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்தது டைம்ஸ் ஆஃப் இந்தியா. பொலிட்டிக்கல் கிடா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் அக்கவுண்டின் மூலம் பரப்பப்படும் சந்தேகத்திற்குரிய வகையிலான காணொலியின் உண்மைத்தன்மை குறித்து ஒவ்வொன்றாகத் தற்போது பார்க்கலாம்.

குற்றச்சாட்டு 1:

மோடியை தேசத்துரோகி என்று நான் சொல்லவில்லை: அரவிந்த் கெஜ்ரிவால்


அரவிந்த் கெஜ்ரிவால் ஏபிபி நியூஸ் செய்திகளுக்கு பேட்டியளித்தார். அப்போது “முன்பு நீங்கள் மோடியை தேசதுரோகி என்று சொன்னீர்களே” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, உடனடியாக “இல்லை இல்லை. நான் அப்படிச் சொல்லவே இல்லை. இதுவரை சொன்னதும் இல்லை” என்று பதில் சொன்னார் அரவிந்த் கெஜ்ரிவால்.

கீழே உள்ள காணொலியில் சரியாக 14.35 ஆவது நிமிடத்தில் அவர் மறுப்பதை நீங்கள் காணலாம்.

உண்மை என்ன?

கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியை தேசதுரோகி என்று சொன்னார். தற்போது அதை இல்லை என்று சொல்வது பொய்.

2017ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி சிட்டி ஃபர்ஸ்ட் நியூஸ் என்ற யூடியூப் சேனலில் ஒரு காணொலி வெளியிடப்பட்டிருந்தது. அதில் ‘மோடியை விடப் பெரிய தேசத்துரோகி இந்தியாவில் இல்லை’ என்று பேசியுள்ளார்.

FACT CHECK: Has Arvind Kejriwal made U-turns in the run-up to Delhi elections?

kejriwal modi deshdrohi என்று தேடினாலே இந்தக் காணொலியைக் காண முடியும். இதில் சரியாக 1.08 ஆவது நிமிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி பேசுகிறார்.

அடுத்த செய்தி