ஆப்நகரம்

Corona: வதந்திகள்...கொரோனா காலத்தின் இன்னொரு சவால்

வதந்திகள், பொய்ச் செய்திகள், பிழைச்செய்திகள் என எல்லாத் தரப்பிலும் கொரோனா குறித்து குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன.

Samayam Tamil 11 Apr 2020, 12:27 pm
வதந்திகளாலும், பொய்ச்செய்திகளாலும் நிரம்பி வருகின்றன சமூக வலைதளங்கள். இந்நிலையில், கொரோனா காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளில் முதன்மையானதாக இருப்பது வதந்திகளின் பரவல் தான் என்கின்றன ஆய்வுகள்.
Samayam Tamil bennet logo


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கைக்கு இணையாக கட்ட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வதந்திகளும் பரவி வருகின்றன.இந்நிலையில், பரவிவரும் கோவிட்-19 சூழலில் பொய்ச்செய்திகளின் பரவல் குறித்து பென்னட் பல்கலைக்கழகத்தால் சர்வதேச இணையவழிக் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பெற்றது.

அதில், “இந்த கொரோனா காலகட்டத்தில் வதந்திகள் தான் மிகப்பெரும் சவாலாக இருக்கப்போகின்றன ” என்பதே முதன்மையான விவாதமாக இருந்தது. மேலும், இதனைக் கையாளுவது குறித்தும் இந்தக் கருத்தரங்கில் செய்திகள் பகிரப்பட்டன.


இதுகுறித்துப் பேசும்போது, “இதுபோன்ற மருத்துவ அவசரநிலை ஏற்படும்போதெல்லாம் வதந்திகள் பரவுவது என்னும் மற்றொரு அவசர நிலையும் ஏற்படுவது வழக்கம். ஆனால், இரண்டையும் கையாள வேண்டும் என்ற எண்ணம் தாமதாகத்தான் வருகிறது” என்கிறார் பெர்லினைச் சேர்ந்த உண்மையறியும் நிபுணரான ஏகன் ஸ்வீனி.

கூகுள் நேரடியாக தானே களமிறங்கி பொய்த் தகவல், பிழையான தகவல், வதந்தி உள்ளிடவற்றை நீக்க முயற்சி செய்து வருகிறது.

இந்த காலகட்டத்தில் தவறான செய்திகளால் ஏற்படும் தாக்கம் கவனிக்க வேண்டியது. உதாரணமாக, மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரும் நிலையில், அதனைக் குலைக்கும் விதமான பதிவுகள் ஏற்படுத்தும் தாக்கம் ஒட்டுமொத்த நிலைமையையும் மாற்றிவிடக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்த நரம்பியல் நிபுணரும், மாற்றறிவியல் அமைப்பின் நிறுவனருமான சுமையா சாயிக்.

Rapid test: சோதனைக்கருவிகள் தாமதமானால், இந்தியாவின் நிலை என்ன?

பொய்ச்செய்திகள், வதந்திகள் மட்டுமல்லாது பிழையான தகவல்களும் கூட இந்த காலகட்டத்தின் சவால்தான்.

அண்மையில் ஒரு அமைச்சர் கூட வெயிலில் நின்றால் கொரோனா தாக்குதல் ஏற்படாது என்று பேசியிருந்தார் என்பதைக் குறிப்பிட்டுப் சுமையா ஹைட்ராக்ஸி குளோரோ குயின் கொரோனாவைக் குணப்படுத்தும் என்று ஆய்வுகள் எல்லாம் கூட சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். ஆனால், அந்த ஆய்வு ஒரு நிரூபிக்கப்படாத ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற அறிவியல் பெயரால் நடைபெறும் பிழைகளும் கூட இந்தச் சூழலை இன்னும் சிக்கலாக்ககூடியது என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படியான செய்திகளுக்கு மத்தியில் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்படும் செய்திகள் அமிழ்ந்துபோக வாய்ப்புண்டு. மேலும், சிலரது வெற்று யூகங்களும் குழப்பத்தை உண்டாக்கக் கூடியது. அரசின் வெளிப்படையான தகவல்கள் மட்டுமே இது போன்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

அடுத்த செய்தி