ஆப்நகரம்

என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்: விவசாயியின் தற்கொலை கடிதம்!

மஹாராஷ்டிரா மாநித்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தான் தற்கொலை செய்வதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Apr 2018, 6:10 pm
மஹாராஷ்டிரா மாநித்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தான் தற்கொலை செய்வதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டுதற்கொலை செய்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 11BM--SUICIDE1


மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டம், ரஜுவர்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் பாபுராவ் சாவ்ரே. 55 வயதான இவருக்கு மனைவியும், திருமண வயதில் 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சங்கர் தனக்குச் சொந்தமாக 9 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சங்கர் தனது நிலத்தில் பருத்தி பயிரிடுவதற்காகதனியார் வங்கியில் இருந்துரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஆனால் பருத்தியில் நோய் தாக்கல் ஏற்பட்டதால், நஷ்டம் ஏற்பட்டு,கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கடனை திருப்பிச் செலுத்தக்கோரி சங்கருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இதனால், கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த சங்கர் நேற்று வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு முன்பு 6 பக்கங்களில்கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது நிலைக்கு பிரதமர் மோடியே காரணம். அவரின் அரசின் செயல்பாடுதான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மறைவுக்கு பின் முதல்வர் பட்நாவிஸ், மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், பாஜக எம்எல்ஏ ராஜு தோட்ஸம் ஆகியோர் தனது குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி