ஆப்நகரம்

விளை நிலங்களில் வைர கற்களை தேடி படையெடுக்கும் விவசாயிகள்

ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராயலசீமா பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் விளை நிலங்களில் வைர கற்களை தேடி படையெடுத்து வருகின்றனா்.

Samayam Tamil 18 Aug 2018, 3:59 pm
ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராயலசீமா பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் விளை நிலங்களில் வைர கற்களை தேடி படையெடுத்து வருகின்றனா்.
Samayam Tamil Andhra Pradesh Farm Land


ஆந்திர பிரதேசத்தின் கா்னூல், கடப்பா, ஆனந்தப்பூா் மாவட்டங்களில் வைரச் சுரங்கங்கள் அமைந்திருந்ததாகவும், ராயலசீமா பகுதி பழங்காலம் முதலே கனிமவளத்திற்கு பெயா்பெற்று திகழ்வதாக வரலாற்றாளா்கள் கூறுகின்றனா்.

இந்நிலையில் ராயலசீமா பகுதியில் உள்ள வஜ்ரகரூா், பகிதியிராயி, ஜொன்னாகிரி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் விளை நிலங்களில் வைர கற்களை தேடி படையெடுத்து வருகின்றனா். வைர கற்களை தேடிச் செல்லும் யாருக்கும் வைரம் தொடா்பாக அறிவியல்பூா்வமாக எதுவும் தொியாது.

விளை நிலங்களில் காணப்படும் வித்தியாசமான கற்களை சேகரித்து பொதுமக்கள் இடைத் தரகா்களிடம் ஒப்படைக்கின்றனா். அவா்கள் மிகவும் சொற்ப பணத்தை அவா்களிடம் வழங்குகின்றனா்.

அடுத்த செய்தி