ஆப்நகரம்

தமிழக விவசாயிகள் தில்லியில் அரை நிர்வாண போராட்டம்

நதி நீர் இணைப்பு திட்டத்தை உடனடியாக தொடங்கவும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்ககோரியும் தமிழக விவசாயிகள் இன்று தில்லியில் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

TNN 23 Mar 2016, 7:01 pm
புதுதில்லி: நதி நீர் இணைப்பு திட்டத்தை உடனடியாக தொடங்கவும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்ககோரியும் தமிழக விவசாயிகள் இன்று தில்லியில் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Samayam Tamil farmers protest in delhi jantar mantar
தமிழக விவசாயிகள் தில்லியில் அரை நிர்வாண போராட்டம்


தில்லி ஜந்தர் மந்தரில் தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுப்படனர். இது தொடர்பாக பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் கடுமையான வரட்சி நிலவி வருகிறது.

இதனால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் . இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

அடுத்த செய்தி