மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு எவ்வளவோ முயற்சித்தும் விவசாயிகளை சமாதானப்படுத்த முடியவில்லை. வேளாண் சட்டங்களால் ஆபத்து இல்லை என அரசு அடம்பிடிக்கிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்வதை தவிர போராட்டங்களுக்கு வேறு தீர்வு இல்லை என விவசாயிகள் பிடிவாதமாக இருக்கின்றனர். நாளையுடன் (மார்ச் 6) விவசாயிகளின் போராட்டம் நூறாவது நாளை தொடுகிறது.
இந்நிலையில், நூறு நாட்கள் ஆனாலும் விவசாயிகளின் இயக்கம் வலிமையுடன் செயல்படுவதாக விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் அரசியல் தளத்தில் விவசாயிகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை நூறாவது நாளை குறிக்கும் வகையில் மார்ச் 6ஆம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நாளை குண்டிலி - மனேசர், பல்வால் எஸ்பிரஸ்வே சாலையில் ஐந்து மணி நேரல் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் சம்யுக்த் கிசான் மோர்சா என்ற விவசாய சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு காலம் ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடத்த விவசாயிகள் தயாராக இருப்பதாக பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நூறு நாட்கள் ஆனாலும் விவசாயிகளின் இயக்கம் வலிமையுடன் செயல்படுவதாக விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் அரசியல் தளத்தில் விவசாயிகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை நூறாவது நாளை குறிக்கும் வகையில் மார்ச் 6ஆம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நாளை குண்டிலி - மனேசர், பல்வால் எஸ்பிரஸ்வே சாலையில் ஐந்து மணி நேரல் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் சம்யுக்த் கிசான் மோர்சா என்ற விவசாய சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு காலம் ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடத்த விவசாயிகள் தயாராக இருப்பதாக பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.