ஆப்நகரம்

பிரதமர் மோடிக்கு இரத்தத்தில் கடிதம் எழுதிய விவசாயிகள்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் பிரதமர் மோடிக்கு இரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 21 Dec 2020, 9:07 pm
விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த மூன்று மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மத்திய அரசு அதனை சட்டமாக்கியுள்ளது.
Samayam Tamil விவசாயிகள் இரத்தத்தில் கடிதம்
விவசாயிகள் இரத்தத்தில் கடிதம்


ஆனால், மண்டி முறையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. புதிய சட்டங்கள் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களும், கார்பரேட் நிறுவனங்களும்தான் பயன்பெறுவர் என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதனை முன்னிறுத்தி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளதால் விவசயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், திரை, விளையாட்டு பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பாஜக - திரிணாமூல் மோதலில் முடிவுக்கு வந்த 10 ஆண்டு கால திருமண வாழ்க்கை!

குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு உறுதியளித்தாலும், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும்வரை போராட்டத்தை தொடர்வது என முடிவெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்தும் ஆதரவுகள் குவிந்து வருகிறது.

விவசாயிகள் இரத்தத்தில் கடிதம்


இந்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் பிரதமர் மோடிக்கு இரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளனர். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்து உலகுக்கு உணவளிக்கும் பாட்டாளி வர்க்கமான விவசாயிகள், தங்கள் இரத்தத்தில் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி