ஆப்நகரம்

மோடியின் ஆசைக்கு செக் வைத்த விவசாயிகள்!

குடியரசு தின விழாவுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருகையை தடுக்க விவசாயிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Dec 2020, 9:26 pm
மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் அரசு சார்பில் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை.
Samayam Tamil File image


இந்தியாவுக்கு புதிய கொரோனா வந்துருச்சா? மத்திய அரசு பதில்!

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதை தவிர வேறு தீர்வு இல்லை என விவசாயிகள் பிடிவாதமாக இருக்கின்றனர்.

ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தின கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போரிஸ் ஜான்சன் வருவதை தடுப்பதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

'பிகில்' விஜய் தொடர்பான வழக்கில் திருப்பம்!

இதுகுறித்து, விவசாய சங்க தலைவர் ஒருவர் ANI செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, “ஜனவரி 26ஆம் தேதியன்று பிரிட்டன் பிரதமர் இந்தியா வரவிருக்கிறார். விவசாயிகளின் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாத வரை போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதை தடுத்து நிறுத்தும்படி பிரிட்டிஷ் எம்.பிக்களுக்கு கடிதம் எழுதி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், குடியரசு தின விழாவுக்கு போரிஸ் ஜான்சன் வர வாய்ப்புகள் மிகக் குறைவு என பிரிட்டன் அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி