மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவில் இன்று இசைக்கப்பட்ட தேசிய கீதத்தின்போது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. #CaughtOnCam Farooq Abdullah talking on phone during the national anthem at Mamata Banerjee's oath taking ceremonyhttps://t.co/3kKSuQUhu5— ANI (@ANI_news) May 27, 2016 மேற்குவங்க முதல்வராக 2வது முறையாக இன்று மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் பதவியேற்றுக் கொண்டார். இதற்கான விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பூடான் பிரதமர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இது வீடியோவாக வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இது வீடியோவாக வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.