ஆப்நகரம்

பாஸ்டேக் காலக்கெடு நீட்டிக்கப்படாது: அமைச்சர் திட்டவட்டம்!

பாஸ்டேக் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

Samayam Tamil 8 Feb 2021, 11:29 pm
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இங்கு கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசலும், நேர விரயமும் ஏற்படுகிறது.
Samayam Tamil பாஸ்டேக்
பாஸ்டேக்


இதனை களையும் பொருட்டு, பாஸ்டேக் எனும் மின்னணு முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த பாஸ்டேக் நடைமுறை தற்போது வரை 80 சதவீதம் வரை மட்டுமே நடைமுறையில் உள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களும் சுங்கச்சாவடிகளில் அனுமதிக்கப்பட்டு வந்தன.

இதனிடையே, 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் இம்முறை கட்டாயம் என மத்திய அமைச்சகம் அறிவித்து இருந்தது. இதனை மீறினால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

ஆனால், இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும், இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, பாஸ்டேக் காலக்கெடுவை பிப்ரவரி 15ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது.

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா.. மிரண்டு போன அதிகாரிகள்.. அதிர்ச்சியில் பெற்றோர்!

இந்த நிலையில், சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு கட்டாயம் அமல்படுத்தப்படும் என்றும், அதற்கு பின்னர் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தாதவர்கள் இரு மடங்கு தொகையை சுங்கக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி