ஆப்நகரம்

பாஸ்போர்ட்டுக்கு தாய் பெயர் மட்டுமே போதுமானது: டெல்லி நீதிமன்றம்

சில சந்தர்ப்பங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது தாயின் பெயரை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

TOI Contributor 21 May 2016, 4:16 pm
சில சந்தர்ப்பங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது தாயின் பெயரை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil fathers name not needed for passport delhi hc says
பாஸ்போர்ட்டுக்கு தாய் பெயர் மட்டுமே போதுமானது: டெல்லி நீதிமன்றம்


இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வந்த ஒரு வழக்கு தொடர்பாக தீர்ப்பு அளித்த நீதிபதி மன்மோகன், தாயுடன் மட்டும் இருப்பவர்கள் தங்களது தாயின் பெயரை பாஸ்போர்ட்டில் பூர்த்தி செய்து கொள்ளலாம். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உத்தரவிட்டு இருந்தார்.

மேலும் தனது உத்தரவில், ''பாஸ்போர்ட்டில் தந்தையின் பெயர் தேவைப்படும் இடத்தில் மட்டும் நிரப்புமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டால் போதும். சட்டத்தின்படி தேவையில்லாதபட்சத்தில் கோர வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது தாய் மட்டும் குழந்தைகளை பேண வேண்டிய சூழல் அதிகரித்துள்ளது. திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய், செக்ஸ் தொழிலாளர்கள், பாலியல் பலாத்காரத்தால் தாய்மை அடைதல், வாடகை தாய்மார்கள், ஐவிஎப் தொழில்நுட்பம் என்று தாய் மட்டுமே குழந்தைகளை கண்காணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கடந்த 2005 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இதேபோன்று ஒரு பெண்ணுக்கு பாஸ்போர்ட் வழங்கியபோதும் தந்தை பெயர் ஒரு நடைமுறையாகத்தான் பார்க்கப்பட்டது. முக்கியம் அல்ல. இதையே நான் சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

தனது மகளை பிறந்ததில் இருந்து வளர்த்து வருவதாகவும், கணவனை துவக்கத்திலேயே விவாகரத்து செய்து விட்டதால், அவரது பயனோ, உதவியோ எந்த சந்தர்ப்பத்திலும் எனது மகளுக்கோ, எனக்கோ கிடைக்கவில்லை ஆதலால் எனது மகளின் பாஸ்போர்ட்டில் தந்தையின் பெயரை பூர்த்தி செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'' என்று நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தாய் ஒருவர் விண்ணப்பித்து இருந்தார்.

அடுத்த செய்தி