ஆப்நகரம்

பேனர் வச்சீங்க அவ்வளவுதான்; பேய் மழையால் மிரட்டப்படும் ஐதராபாத்

பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால், பேனர்களுக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

TNN 13 May 2017, 11:47 am
ஐதராபாத்: பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால், பேனர்களுக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Samayam Tamil fearing heavy storms and rain hyd municipality bans banners and hoardings
பேனர் வச்சீங்க அவ்வளவுதான்; பேய் மழையால் மிரட்டப்படும் ஐதராபாத்


தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 9ஆம் தேதி மட்டும் 96 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பலத்த சூறைக்காற்று வீசியதால், 300க்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்கள் வாகனங்கள் மீது விழுந்ததால், பெரும் சேதத்தை ஏற்படுத்தின. சாலைகளில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதற்கிடையில் அடுத்த சில நாட்களுக்கு ஆந்திராவில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 510 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 100 முதல் 150 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கை உடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐதராபாத் நகரில் பேனர்கள், விளம்பர பலகைகள், கட் அவுட்கள் வைக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள 3000 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த புதிய உத்தரவு வரும் ஜூன் 15ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fearing heavy storms and rain, Hyd municipality bans banners and hoardings.

அடுத்த செய்தி