ஆப்நகரம்

Priyanka Gandhi: நீ கெத்து ப்ரோ; உன் முடிவை மதிக்கிறேன்- ராகுல் குறித்து பிரியங்கா அசத்தல் டுவிட்!

காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து ராஜினாமா செய்த ராகுல் காந்தியின் முடிவை, பிரியங்கா காந்தி வரவேற்றுள்ளார்.

Samayam Tamil 4 Jul 2019, 11:25 am
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. இதற்கிடையில் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது.
Samayam Tamil rahul_priyanka.


இதனால் வருத்தம் கொண்டிருந்த அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ய முயன்றும் இயலவில்லை.

தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ராகுல் காந்தி, நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தனது ராஜினாமாவில் எந்த மாற்றமும் இல்லை.

உடனே புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காரியக் கமிட்டி கூட்டத்தை கூட்டுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே காங்கிரஸ் செயற்குழுவை கூட்டி, புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் இருக்கிறார்.

இந்நிலையில் பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில், ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவு குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ஒரு சிலருக்கு இப்படியொரு தைரியம் இருக்கும். உங்கள் முடிவை பெரிதும் மதிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி