டெல்லி: பயங்ரவாதத்திற்கு எதிர்ப்பு என்பது எந்த மதத்திற்கு எதிரான போராட்டமும் அல்ல என்று இந்தியா வந்துள்ள ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பேசியுள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரைச் சந்தித்தார்.
பின், இஸ்லாமியப் பாரம்பரியம் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றிய அவர், “உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது எந்தவொரு மதத்திற்கு எதிரான போர் என்றோ முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டம் என்றோ ஆகாது. அது வெறுப்புணர்வுக்கும் வன்முறைக்கும் எதிரானது” என்று குறிப்பிட்டார். மேலும், “இதைப்பற்றி தவறான தகவல்களைப் பிரச்சாரம் செய்பவர்களைக் கண்காணிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
Today's global war against terror is not a fight between different religions or people. It is between all faiths and communities against extremism, hate and violence: King Abdullah II of Jordan in Delhi pic.twitter.com/GwrarHnLLI — ANI (@ANI) March 1, 2018 “இன்று செய்திகளிலும் காண்பவையும் மதத்தைப் பற்றிய பார்வையும்தான் மக்களைப் பிரிவினைகளுக்கு உட்படுத்துகின்றன. மற்றவர்களைப் பற்றி அறிந்துகொள்ளாத குழுக்களால் உலகம் முழுவதும் நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது. அவர்களது வெறுப்பை உமிழும் கருத்துக்கள் கடவுளின் வார்த்தையைக் திரித்து கலவரத்தைத் தூண்டுகின்றன.” என்றும் அப்துல்லா கூறினார்.
இந்தியா வந்துள்ள ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரைச் சந்தித்தார்.
பின், இஸ்லாமியப் பாரம்பரியம் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றிய அவர், “உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது எந்தவொரு மதத்திற்கு எதிரான போர் என்றோ முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டம் என்றோ ஆகாது. அது வெறுப்புணர்வுக்கும் வன்முறைக்கும் எதிரானது” என்று குறிப்பிட்டார். மேலும், “இதைப்பற்றி தவறான தகவல்களைப் பிரச்சாரம் செய்பவர்களைக் கண்காணிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
Today's global war against terror is not a fight between different religions or people. It is between all faiths and communities against extremism, hate and violence: King Abdullah II of Jordan in Delhi pic.twitter.com/GwrarHnLLI — ANI (@ANI) March 1, 2018 “இன்று செய்திகளிலும் காண்பவையும் மதத்தைப் பற்றிய பார்வையும்தான் மக்களைப் பிரிவினைகளுக்கு உட்படுத்துகின்றன. மற்றவர்களைப் பற்றி அறிந்துகொள்ளாத குழுக்களால் உலகம் முழுவதும் நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது. அவர்களது வெறுப்பை உமிழும் கருத்துக்கள் கடவுளின் வார்த்தையைக் திரித்து கலவரத்தைத் தூண்டுகின்றன.” என்றும் அப்துல்லா கூறினார்.