ஆப்நகரம்

நோயாளிகளுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: மத்திய அரசு தகவல்!

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 17 Mar 2020, 6:10 pm
டெல்லி: அரிய நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு நிதியுதவியாக ரூ.15 லட்சம் வரை வழங்க வகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil அஸ்வினி குமார் சவ்பே
அஸ்வினி குமார் சவ்பே


அரிய நோய்கள் குறித்த வரைவு தேசியக் கொள்கை இறுதி செய்யப்பட்டு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரின் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை அறிவதற்காக, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதேசமயம், தேசிய ஆரோக்கிய நிதி என்ற பொதுவான திட்டத்தின் கீழ், அரிய நோய்களின் தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டு (2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிட்டு) சேர்க்கப்பட்டுள்ளது.

கொரோனா: கைதிகளை குடும்பத்தினர் சந்திக்க தடை!

அதன்படி, குறிப்பிட்ட அரிய நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு ஒருமுறை நிதியுதவியாக ரூ.15 லட்சம் வரை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

என்சைம் மாற்று சிகிச்சை தற்போது கிடைக்காத நிலையில், லைசோசோம் சேமிப்பு குறைபாடு உள்ளிட்ட ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்க வகை செய்யும் ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை மற்றும் இரண்டு வயது வரை உள்ளவர்களை பாதிக்க கூடிய மியூகோ பாலிசாக்ரைடாசிஸ் முதல் வகை பாதிப்புகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் எச்சரிக்கை: ரயில்வே பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கப்படுமா?

இந்த தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி