ஆப்நகரம்

ஆஃபீசில் கலெக்டர் சார் செஞ்ச வேலைய பாருங்க மக்களே!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் வைத்து, பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து, சத்தீஸ்கர் மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 4 Jun 2020, 9:06 pm
பணியிடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது தொடர் நிகழ்வாகவே உள்ளது. இதனை மீண்டுமொருமுறை உறுதி செய்வது போன்றதொரு சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil fir


இந்த மாநிலத்தின் ஜான்ஸ்கிர் ஷம்பா மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்தவர் ஜே.கே. பதக். இவர் தமது அலுவலகத்தில் பணிபுரியும் 33 வயது பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். அத்துடன் அந்த பெண்ணின் மொபைல் எண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ்களை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

இதனை அந்தப் பெண் கண்டித்தபோது, தமது ஆசைக்கு இணங்க மறுத்தால், அரசு அலுவலரான அப்பெண்ணின் கணவரை பணிநீக்கம் செய்துவிடுவேன் என்றும் கலெக்டர் சார் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரது பாலியல் கொடுமைகளை தாங்க முடியாத பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நோ மாஸ்க்... நோ சோசியல் டிஸ்டன்ஸ்... சுகாதாரத் துறை அமைச்சரின் விழாவில்தான் இந்தக் கூத்து!!

அதில், " மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள்ளேயே கலெக்டர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். அவர் என்னிடம் மொபைல்ஃபோனில் ஆபாசமாக பேசியதற்கு ஆதாரம் உள்ளது" என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

பெண் அளித்த புகாரின் பெயரில், மாவட்ட ஆட்சியர் மீது சத்தீஸ்கர் மாநில போலீசார வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியராக இருந்த ஜே.கே. பதக்கை பணியிடை நீக்கம் செய்து மாநில முதல்வர் பூபேஷ் பேகல் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி