ஆப்நகரம்

மும்பை தாராவி-யில் திடீர் தீ விபத்து!

மும்பை தாராவியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் அண்ணாநகர் குடிசை பகுதியில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Samayam Tamil 10 Jun 2018, 11:27 am
மும்பை தாராவியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் அண்ணாநகர் குடிசை பகுதியில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Samayam Tamil thinkstockPhotos-851824664
மும்பை தாராவி-யில் திடீர் தீ விபத்து: குடிசைகைள் எரிந்து சேதம்!


உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவி, மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்று. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படமும் தாராவியை மையப்படுத்திதான் எடுக்கப்பட்டிருக்கும் . இதன்மூலம் தாராவி குடிசைப்பகுதி தமிழக மக்களிடையே மேலும் பிரபலமடைந்தது.

ஏராளமான குடிசைப் பகுதிகளை கொண்ட இங்கு அண்ணாநகர் பகுதியில் உள்ள 90 அடி சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பற்றிய தீ, அருகிலுள்ள குடிசை பகுதிகளுக்கும் பரவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றாலும், இன்னும் அணைக்கப்பட வேண்டும்’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

அடுத்த செய்தி