ஆப்நகரம்

அதிக வீரிய பட்டாசுகளுக்கு தடை: கேரள நீதிபதி கடிதம்

அதிக வீரியத்துடன் வெடிக்கும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

TNN 11 Apr 2016, 4:48 pm
திருவனந்தபுரம்: அதிக வீரியத்துடன் வெடிக்கும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil fireworks explode at high phase should be ban kerala justice
அதிக வீரிய பட்டாசுகளுக்கு தடை: கேரள நீதிபதி கடிதம்


கேரள மாநிலம் கொல்லம் பரவூர் புட்டிங்கல் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 350-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் அதிக வீரியத்துடன் வெடுக்கும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றக்கு நீதிபதி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே, பட்டாசு நிகழ்ச்சியின் போது தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி