ஆப்நகரம்

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் - கம்பெனி சீனாவா? முதல்வர் தடாலடி!

தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இளைஞர்கள், மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை மாநில அரசு தொடங்கி வைக்கவுள்ளது.

Samayam Tamil 29 Jul 2020, 11:53 am
பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தங்கள் தேர்தல் வாக்குறுதியில் இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும். இதன்மூலம் தினசரி வாழ்வில் தொழில்நுட்ப வசதிகளை இளைஞர்கள் எளிதில் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அறிவிப்பு குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் பஞ்சாப் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் தொண்டர்களுடன் முதலமைச்சர் அமரிந்தர் சிங் வீடியோ கான்பரன்சிங் மூலம் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil Free Smartphones in Punjab


அப்போது இலவச ஸ்மார்ட்போன் திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்ட நிலையில், அதற்கான வேலைகளை மாநில அரசு முடுக்கிவிட்டது. இதையொட்டி நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான ’லாவா’ உடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

புதிய கல்விக் கொள்கைக்கு விரைவில் ஒப்புதல்; எதிர்பார்ப்பை கூட்டிய அமைச்சரவை கூட்டம்!

முதல்கட்டமாக 50,000 ஸ்மார்ட்போன்கள் தயாரான நிலையில் அவற்றை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் இந்திய - சீன எல்லைப் பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சீனப் பொருட்கள் மீதான எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பஞ்சாப் அரசு ஒப்பந்தம் போட்டுள்ள ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்கு சீனாவுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா என்று கேள்வி எழுந்தது. இதுபற்றி உடனே ஆய்வு செய்து பதிலளிக்குமாறு முதலமைச்சர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டிருந்தார்.

இதில் சம்பந்தப்பட்ட ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்கும் சீனாவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று தெரியவந்துள்ளதாக அறிக்கை மூலம் பஞ்சாப் முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பலம் பெறும் இந்திய விமானப்படை; ஃபர்ஸ்ட் செட் ரெடி - சீறி வரும் ரபேல் போர் விமானங்கள்!

தற்போதைய சூழலில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் முதலில் அவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி