ஆப்நகரம்

இப்படியொரு சர்ச்சை - சட்டவிரோத குடியேறிகளுக்கு தடுப்பு மையம் ஆக எஸ்.சி/எஸ்.டி விடுதி!

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நபர்களுக்கான விடுதி தற்போது சட்டவிரோத குடியேறிகளுக்கு தடுப்பு மையமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Dec 2019, 12:42 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வடமேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் நீலமங்கலா தாலுக்காவில் செண்டிகுப்பா என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்கு அரை ஏக்கரில் L-வடிவத்தில் அமைந்துள்ள 28 ஆண்டுகள் பழமையான கட்டடம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Samayam Tamil Centre


முன்னதாக இந்த கட்டடம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் விடுதியாக செயல்பட்டு வந்தது. கடந்த 1992ஆம் ஆண்டு கட்டப்பட்டு அருகிலுள்ள அரசு பள்ளியில் இருந்து வந்து ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கி படித்து வந்தனர்.

மாநிலம் முழுவதும் நாளை அரசு விடுமுறை- அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா!

இறுதியாக 2008ஆம் ஆண்டு மூடப்பட்டது. தற்போது புதுப்பிக்கப்பட்டு சட்டவிரோத குடியேறிகளுக்காக கர்நாடகாவின் முதல் தடுப்பு மையம் என்ற நிலையை அடைந்தது. விரைவில் முறைப்படி திறந்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ஐ அமல்படுத்தியது. இதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் நாடு முழுவதும் அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு தடுப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ள விஷயம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமித் ஷா: அர்பன் நக்சல்தான் போராட்டத்த கிளப்புராங்க!

இங்கு ஒருசமயத்தில் 30 பேர் மட்டும் தங்க அனுமதிக்கப்படுவர் என்று சமூக நலத்துறை தெரிவித்துள்ளது. இந்த கட்டடத்தில் 6 அறைகள் உள்ளன. அவற்றில் மூன்று அறைகள் 10x15 சதுர அடியில் டார்மிடரிகள் உடன் அமைந்துள்ளன.

ஒவ்வொரு டார்மிடரியிலும் 5 படுக்கைகள் இருக்கின்றன. மேலும் 10x8 சதுர அடியில் 2 பொருட்கள் வைக்கும் அறைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டவிரோத குடியேறிகளுக்கு தடுப்பு மையம் அமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

என்ஆர்சி, என்பிஆருக்கு ஒப்புதல் வழங்கியாச்சு...

இவற்றில் மின்சாரம், குடிநீர், படுக்கை வசதி, கழிவறை, குளியலறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இங்கு தங்கும் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும்.

மேலும் கழிவுநீர் வடிகால் வசதிகள், பாதுகாப்பு வசதிகள், ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனி அறைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி