ஆப்நகரம்

புல்லட் ரயில் லுக்கில் முதல் மேட்-இன்-இந்தியா எஞ்சின் இல்லாத ரயில்; விரைவில் சோதனை ஓட்டம்!

சென்னை: நாட்டின் முதல் எஞ்சினற்ற உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரயில் விரைவில் சோதனை ஓட்டத்திற்கு விடப்பட உள்ளது.

Samayam Tamil 23 Oct 2018, 2:32 pm
நம் நாட்டிலேயே திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டு மற்றும் தயாரிக்கப்பட்ட புல்லட் ரயில் போன்ற தோற்றம் கொண்ட எஞ்சின் அற்ற ரயில் ஆனது இன்னும் ஒருவாரத்தில் சோதனை ஓட்டத்திற்கு விடப்பட உள்ளது. இதுகுறித்து பேசிய ஐ.சி.எஃப் பொது மேலாளர் சுதான்சு மணி, இதற்கு லோகோமோட்டிவ் அம்சம் தேவைப்படாது.
Samayam Tamil Train


இது ரயில்-18 என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் ரூ.100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் ரயில் ரேக் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்ட நிலையில், இரண்டாவது ரயில் ரேக் வரும் மார்ச் மாதத்தில் தயாராக இருக்கும். அதிகப்படியான ரேக்குகள் தயாரிக்கப்படும் நிலையில், இதன் செலவும் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இந்த எஞ்சினற்ற ரயில் ஒரே நாளில் பயணம் மேற்கொள்ளும் டெல்லி - போபால், சென்னை - பெங்களூரு, மும்பை - அகமதாபாத் வழித்தடங்களில் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் 10 - 15% வரை ரயில் பயண நேரம் குறைக்கப்படும். இந்த ரயில் 50% அதிக ஆற்றல், ஸ்மார்ட் பிரேக்கிங் சிஸ்டம், ஹங்கேரியில் இருந்து பெறப்பட்ட எலக்ட்ரோ நிமேட்டிக் பிரேக்கிங் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் சுதான்சு மணி கூறுகையில், இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவைகளில் தனித்துவம் மிக்கது. நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளதால், தொழில்நுட்பத்திற்கான செலவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற ரயில் பெட்டிகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் ரூ.170 கோடி அளவிற்கு செலவாகும்.

இங்குள்ள தனியார் நிறுவனங்கள் இதேபோன்ற ரயில் பெட்டிகளை தயாரிக்க 36 மாதங்கள் ஆகின்றன. இந்த ரயிலின் மத்தியில் உள்ள எக்சிக்யூடிவ் கிளாஸ் பெட்டிகளில் இருக்கைகள் 360 டிகிரி சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் ஓட்டுநரின் பெட்டிக்குள் நுழைந்து பார்வையிடும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.

First Made-in-India engineless train gets on track for trial run.

அடுத்த செய்தி