ஆப்நகரம்

68 ஆண்டுகால உச்சநீதிமன்ற வரலாற்றில், முதல்முறையாக 3 பெண் நீதிபதிகள்!

உச்சநீதிமன்றத்தில் விரைவில் 3 பெண் நீதிபதிகள் பணியாற்ற உள்ளனர்.

Samayam Tamil 4 Aug 2018, 8:45 pm
புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் விரைவில் 3 பெண் நீதிபதிகள் பணியாற்ற உள்ளனர்.
Samayam Tamil three-woman-judges


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளார். இதன்மூலம் 68 ஆண்டுகால உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரே நேரத்தில் 3 பெண் நீதிபதிகள் பணியாற்ற உள்ளனர்.

அவர்கள் ஆர்.பானுமதி, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் ஆகும். உச்சநீதிமன்றத்தில் 7க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் பதவி வகித்துள்ளனர். அவர்களின் முதன்மையானவர் பாத்திமா பீவி. இவர் கடந்த 1989ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

இதையடுத்து சுஜாதா மனோகர், ரூபா பால், ஞான் சுதா மிஸ்ரா, ரஞ்சானா பிரகாஷ் தேசாய், ஆர். பானுமதி, இந்து மல்ஹோத்ரா ஆகியோர் நீதிபதிகளாக இருந்துள்ளனர். இவர்களில் பீவி, மனோகர் மற்றும் பால் ஆகியோர் மட்டுமே, ஓய்வு பெறும் வரை தொடர்ந்து நீதிபதிகளாக இருந்துள்ளனர்.

நீதிபதி பீவி 1992ல், மனோகர் 1999ல், பால் 2006லும் ஓய்வு பெற்றனர். கடந்த 2010ல் நீதிபதியாக இருந்த சுதா மிஸ்ராவிற்கு பிறகு, நீண்ட காலமாக பெண் நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் பானுமதி வரும் ஜூலை 19, 2020ல், மல்ஹோத்ரா மார்ச் 13, 2021ல், பானர்ஜி செப்டம்பர் 24, 2022ல் ஓய்வு பெறுகின்றனர்.

First time in its 68-year history, Supreme Court to have three Sitting Woman Judges.

அடுத்த செய்தி