இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். நடப்பாண்டு சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் போல்சனாரோ வருகை புரிந்துள்ளார்.
இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆயுதங்கள், விமானங்கள் ஆகியவையும் அணிவகுப்பில் கலந்து கொண்டன.
குடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது!
இவற்றை குடியரசு தலைவர் வீர வணக்கம் செலுத்தி ஏற்றுக் கொண்டார். வழக்கமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மட்டுமே மரியாதை செலுத்தப்படும்.
இந்நிலையில் குடியரசு தின கொண்டாட்டத்தில் முதல்முறையாக இந்தியா கேட் சென்று தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3!
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோரும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி இந்தியா கேட் வளாகத்தில் தேசிய போர் நினைவிடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 40 ஏக்கரில் அமைந்துள்ள இந்த நினைவு சின்னத்தில் நான்கு சக்கரங்கள் அமைந்துள்ளன. அவை அமர் சக்ரா, வீர்தா சக்ரா, தியாக் சக்ரா, ரக்ஷக் சக்ரா ஆகியவை ஆகும்.
வீரதிரச் செயலுக்கான விருதுகள் அறிவிப்பு... விருதுகளை அள்ளியிருக்கும் ஜம்மு காஷ்மீர் ‘மாநிலம்’...
இதில் 25,942 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடத்தின் மத்தியில் 15.5 மீட்டர் உயரத்தில் தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அணையா விளக்கு, இந்திய ராணுவத்தின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆயுதங்கள், விமானங்கள் ஆகியவையும் அணிவகுப்பில் கலந்து கொண்டன.
குடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது!
இவற்றை குடியரசு தலைவர் வீர வணக்கம் செலுத்தி ஏற்றுக் கொண்டார். வழக்கமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மட்டுமே மரியாதை செலுத்தப்படும்.
இந்நிலையில் குடியரசு தின கொண்டாட்டத்தில் முதல்முறையாக இந்தியா கேட் சென்று தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3!
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோரும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி இந்தியா கேட் வளாகத்தில் தேசிய போர் நினைவிடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 40 ஏக்கரில் அமைந்துள்ள இந்த நினைவு சின்னத்தில் நான்கு சக்கரங்கள் அமைந்துள்ளன. அவை அமர் சக்ரா, வீர்தா சக்ரா, தியாக் சக்ரா, ரக்ஷக் சக்ரா ஆகியவை ஆகும்.
வீரதிரச் செயலுக்கான விருதுகள் அறிவிப்பு... விருதுகளை அள்ளியிருக்கும் ஜம்மு காஷ்மீர் ‘மாநிலம்’...
இதில் 25,942 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடத்தின் மத்தியில் 15.5 மீட்டர் உயரத்தில் தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அணையா விளக்கு, இந்திய ராணுவத்தின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.