ஆப்நகரம்

ஹதராபாத்தின் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த ஹதராபாத்தின் மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

TNN 17 Sep 2016, 9:37 am
தெலுங்கானா மாநிலத்தின் மெஹபூப் நகர் மாவட்டத்தின் சாட்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். ஹைதராபாத்தின் மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூன் மாதம் ஃபைன் ஆர்ட்ஸ் பிரிவில் முதலாமாண்டு சேர்ந்துள்ளார். மேலும், 3 மாதங்கள் ஆன நிலையில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிரவீன் குமார் இன்று அதிகாலை தன்னுடைய ஹாஸ்டல் ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Samayam Tamil first year student from mfa course hyderabad central university commits suicide
ஹதராபாத்தின் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர் தூக்கிட்டு தற்கொலை


#FLASH First year student from MFA course (Hyderabad Central University) commits suicide; body taken to hospital.— ANI (@ANI_news) September 17, 2016
Police is investigating the matter. The student who has committed suicide was MFA (Painting) Student: Vipin Srivastava, University Spox— ANI (@ANI_news) September 17, 2016

இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் மருத்து அதிகாரிக்கு தகவல் கொடுக்குப்பட்டு பின்னர் லிங்கம்பள்ளியில் உள்ள சிட்டிசன் மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்று போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி