ஆப்நகரம்

சொந்த ஊருக்கு திரும்பிய மீனவர்கள்: அலேக்காக பிடித்துச் சென்ற போலீஸ்!!

சென்னையில் இருந்து கடல் மார்க்கமாக, ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் வந்து சேர்ந்த 27 மீனவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Samayam Tamil 20 Apr 2020, 9:07 pm
வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பிழைப்புக்காக வந்திருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர், தற்போது நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இல்லாமலும், உணவு கிடைக்காமலும் திண்டாடி வருவதாக தெரிகிறது.
Samayam Tamil fisherman


ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஒடிசா மாநிலம் ஆகிய இடங்களில் இருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த மீனவர்கள் 27 பேர், இதுநாள் வரை சென்னையில் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு, சென்னையில் வேலை இல்லாத நிலையில் சாப்பாட்டிற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டது.

குழந்தை பெற்று 22 நாட்களில் பணிக்கு சேர்ந்த அதிகாரி

சொந்த ஊருக்கு செல்லலாம் என்று கருதினால் போக்குவரத்து வசதி இல்லை. இதனால் அவர்கள் 27 பேரும் கூட்டாக சேர்ந்து 1.7 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து புதிய படகு ஒன்றை வாங்கினர்.

அதன் மூலம், கடந்த ஒருவாரமாக கடல் மார்க்கமாக பயணித்த அவர்கள், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள டொங்கூறு கடலோர கிராமத்தை நேற்று மாலை அடைந்தனர்.

நடு ரோட்டில் சிறுத்தை... அச்சத்தில் மக்கள்!

சென்னையிலிருந்து மீனவர்களை 27 பேர் கடல் மார்க்கமாக டொங்கூறு வந்து கொண்டிருப்பதை அறிந்த போலீசார், அந்த கிராமத்தில் முகாமிட்டு காத்திருந்தனர்.

மீனவர்கள் அந்த கிராமத்துக்கு வந்ததும், அவர்களை அலேக்காக பிடித்து, வருவாய் துறையினர் உதவியுடன் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி