ஆப்நகரம்

சென்னையிலிருந்தே கேரள மக்களைக் காப்பாற்றியே 5 பேர்!

சென்னையைச் சேர்ந்த 5 பேர் இணையதளம் மூலம் கேரளாவில் வெள்ளத்தில் தவிப்பவர்கள் பலரைக காப்பாற்றியுள்ளனர்.

Samayam Tamil 22 Aug 2018, 11:42 pm
சென்னை: சென்னையைச் சேர்ந்த 5 பேர் இணையதளம் மூலம் கேரளாவில் வெள்ளத்தில் தவிப்பவர்கள் பலரைக காப்பாற்றியுள்ளனர்.
Samayam Tamil kashmir-floods


கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் அம்மாநிலத்துக்கு பல தரப்பிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆபத்தான பகுதியில் இருப்பவர்களுக்கு உதவ ஒரு இணையதளத்தைத் தொடங்கி அதன் மூலம் பலரது உயிரைக் காப்பாற்றி உள்ளனர் சென்னையைச் சேர்ந்த 5 பேர்.

EachOneHostOne.com என்ற இணையளத்தை கடந்த 5 நாட்களுக்கு முன் உருவாக்கிய அவர்கள் அதன் மூலம் தங்கள் இருப்பிடம் பற்றிய தகவலைத் தெரிவிப்பவர்களுக்கு அவர்களுக்கு மிக அருகில் ஒரு பாதுகாப்பான இடத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் பணியைச் செய்துள்ளனர்.

மீட்புப்பணியில் தீவிரமாக செயல்பட்டு அரசுப் பணியாளர்களின் சுமையைக் குறைக்க இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும் இனி வருங்காலத்திலும் இதே போல உதவக் காத்திருப்பதாகவும் அந்த குழுவில் ஒருவரான மகேஷ் கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.

அடுத்த செய்தி