ஆப்நகரம்

இந்தியன் ஆர்மி கவுண்டவுன் ஸ்டார்ட் ....பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 பேர் காலி!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்தி வரும் பீரங்கி தாக்குதலில் 3 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Oct 2019, 6:41 pm
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், டங்தார் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி வழியாக, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊருடுவ முயற்சிப்பதாக இந்திய ராணுவத்துக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது.
Samayam Tamil pokta


இதற்கு உதவி செய்யும் நோக்கில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதில் இந்திய வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுக்கு எதிரான தமது கவுண்டவுனை இந்திய ராணுவம் இன்று அதிகாலை முதல் தொடங்கியுள்ளது.

பீரங்கியால் அடிச்சு நொறுக்கும் ராணுவம்; பாகிஸ்தானை பழி தீர்க்கிறதா இந்தியா?

டங்தார் எல்லை அருகே உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, அதிரடி பீரங்கி தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தி வருகிறது.
இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத முகாம்கள் மொத்தமாய் அழிக்கப்படும் வரை இந்திய ராணுவத்தின் தாக்குதல் தொடரும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறும்போது , "ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்க, பயங்காரவாதிகள் ஊடுடுவல் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். காஷ்மீர் பள்ளதாக்கில் அமைதி திரும்பி வரும் நடைபெற்ற இந்த ஊடுருவல் முயற்சிக்கு இந்த ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது " என அவர் தெரிவித்தார்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலம் , புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலிவ் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதற்கு பதிலடியாக, பிப்ரவரி 26- ஆம் தேதி ,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலக்கோட்டில் இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தது.

அந்தத் தாக்குதல் அப்பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் -இ- முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் அழிக்கப்பட்டதாகவும், 300 -க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

அடுத்த செய்தி