ஆப்நகரம்

குப்வாரா என்கவுண்டரில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம்!

குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையில் நடந்த என்கவுண்டர் தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 2 Mar 2019, 2:53 am
குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையில் நடந்த என்கவுண்டர் தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil kupwara


ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாபாகுண்ட் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்பு வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிஆர்பிஎஃப் வீரர்கள் என்கவுண்டர் தாக்குதல் நடத்தினர். ஆனால், எதிர்பாராத விதமாக 2 போலீஸ் அதிகாரிகள் நாசீர் அகமது கோலி மற்றும் குலாம் முஸ்தபா பாரா, 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பிந்து மற்றும் வினோத் மற்றும் அப்பாவி ஒருவர் வாசீம் அகமது மிர் ஆகியோர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, அதே பகுதியில் நடந்த என்கவுண்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், தாக்குதல் நடந்த பகுதியில், இளைஞர்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையில், மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், 4 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி