புதுதில்லி: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான, மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலங்கள் வருகிற மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, இந்த மாநிலங்களில் புதிய அரசை அமைப்பதற்கு எதுவாக பேரவைத் தேர்தலை நடத்தும் பொருட்டு அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
ஐந்து மாநில தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளுக்கு சுமார் 1 பாதுகாப்பு படையினர் தேவை என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கோரியிருந்தது. அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. அதனையடுத்து, தேர்தல் தேதி எந்த நேரமும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதனிடையே, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர், வழக்கமாக நடைபெறும் நடைமுறையான, ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கையை, அந்தந்த மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், மத்திய அமைச்சரவை செயலாளருக்கும் தேர்தல் ஆணையம் நேற்று அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், இந்த ஐந்து மாநிலங்களுக்குமான தேர்தல் தேதி நாளை வெளியாக வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Five states Assembly election date likely to announce tomorrow?
நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான, மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலங்கள் வருகிற மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, இந்த மாநிலங்களில் புதிய அரசை அமைப்பதற்கு எதுவாக பேரவைத் தேர்தலை நடத்தும் பொருட்டு அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
ஐந்து மாநில தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளுக்கு சுமார் 1 பாதுகாப்பு படையினர் தேவை என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கோரியிருந்தது. அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. அதனையடுத்து, தேர்தல் தேதி எந்த நேரமும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதனிடையே, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர், வழக்கமாக நடைபெறும் நடைமுறையான, ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கையை, அந்தந்த மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், மத்திய அமைச்சரவை செயலாளருக்கும் தேர்தல் ஆணையம் நேற்று அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், இந்த ஐந்து மாநிலங்களுக்குமான தேர்தல் தேதி நாளை வெளியாக வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Five states Assembly election date likely to announce tomorrow?