மாட்டிறைச்சியை கடத்தியதாகக் கூறி ஊனமுற்ற வாலிபரை எாிக்க முயன்ற சம்பவம் அாியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி தொடா்ந்து ஒரு பிாிவினா் தாக்குதலில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடா்ந்து அரங்கேறி வருகிறது. தற்போதும் அதே சம்பவம் அாியானாவில் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
அாியானா மாநிலத்தில் ஊனமுற்ற வாலிபரான ஆசாத் என்பவர் ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்துகிறார். அங்குள்ள இறைச்சி கடைக்காரரிடம் வாடகைக்கு ரிக்ஷா ஓட்டுவது வழக்கம்.
நேற்று இவர் ரிக்ஷா ஓட்டிச் சென்ற போது 2 பேர் வழி மறித்துள்ளனர். மாட்டிறைச்சி கடத்துகிறாரா? என்று கூறி அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு ரிக்ஷாக்காரர் காவல் நிலையம் வாருங்கள் சோதனையிடலாம் என்று கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த 2 பேரும் செல்போனில் சிலரை வரவழைத்தனர். 6 பேர் சேர்ந்து வாலிபர் ஆசாத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில் ஆசாத் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அதன் பிறகு திடீர் என்று அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைக்க முயன்றனர். தீக்குச்சியை உரசிய போது காவலா் ஒருவர் அங்கு ஓடி வந்து வாலிபரை மீட்டார். இதனால் அந்த இளைஞா் உயிர் தப்பினார்.
காவல்துறையை பார்த்ததும் கும்பல் தப்பி ஓடிவிட்டது. காயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பற்றி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது வாலிபரை தாக்கிய 7 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் துணை கமிஷனர் அஸ்தா மோடி தெரிவித்தார்.
வட மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி தொடா்ந்து ஒரு பிாிவினா் தாக்குதலில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடா்ந்து அரங்கேறி வருகிறது. தற்போதும் அதே சம்பவம் அாியானாவில் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
அாியானா மாநிலத்தில் ஊனமுற்ற வாலிபரான ஆசாத் என்பவர் ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்துகிறார். அங்குள்ள இறைச்சி கடைக்காரரிடம் வாடகைக்கு ரிக்ஷா ஓட்டுவது வழக்கம்.
நேற்று இவர் ரிக்ஷா ஓட்டிச் சென்ற போது 2 பேர் வழி மறித்துள்ளனர். மாட்டிறைச்சி கடத்துகிறாரா? என்று கூறி அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு ரிக்ஷாக்காரர் காவல் நிலையம் வாருங்கள் சோதனையிடலாம் என்று கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த 2 பேரும் செல்போனில் சிலரை வரவழைத்தனர். 6 பேர் சேர்ந்து வாலிபர் ஆசாத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில் ஆசாத் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அதன் பிறகு திடீர் என்று அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைக்க முயன்றனர். தீக்குச்சியை உரசிய போது காவலா் ஒருவர் அங்கு ஓடி வந்து வாலிபரை மீட்டார். இதனால் அந்த இளைஞா் உயிர் தப்பினார்.
காவல்துறையை பார்த்ததும் கும்பல் தப்பி ஓடிவிட்டது. காயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பற்றி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது வாலிபரை தாக்கிய 7 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் துணை கமிஷனர் அஸ்தா மோடி தெரிவித்தார்.