ஆப்நகரம்

அருணாசல பிரதேசத்தைத் தொடர்ந்து மகாராஷ்ட்ராவிலும் நிலநடுக்கம்

இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அருணாசல பிரதேசத்தில் நேற்று மதியம் 2.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் கமெங் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மகாராஷ்ராவின் பால்கார் பகுதியிலும் இன்று காலை 9.17 மணிக்கு 3.5 ரிக்டர் அளவு நில நடுக்கம் ஏற்பட்டது.

Samayam Tamil 20 Jul 2019, 11:34 am
அருணாசல பிரதேசத்தில் நேற்று மதியம் 2.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து கமெங் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் உறங்கிக் கொண்டு இருந்த மக்கள் பீதியடைந்து தெருவுக்கு ஓடி வந்தனர். ஆனால் இதனால் உயிர்சேதமோ, கட்டடங்களுக்கு பாதிப்போ ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்ராவின் பால்கார் பகுதியிலும் இன்று காலை 9.17 மணிக்கு 3.5 ரிக்டர் அளவு நில நடுக்கம் பதிவானது.
Samayam Tamil earthquake.


முன்னதாக நேற்று அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நொடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஜோர்ஹாட்டில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் பிற்பகல் 2.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால், மக்கள் வீதிகளுக்கு ஓடிவந்தனர்.

இந்த நில அதிர்வு அசாமிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

இந்தியாவிலேயே, மேகாலயா, நாகாலந்து, சிக்கிம், மணிப்பூர், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில்தான் நில நடுக்கம் அதிகமாக ஏற்படுகிறது. இயற்கை பேரழிவுகளில் இருந்து முன்னெச்சரிக்கையாக தப்பிக்க நவீன இயந்திர கருவிகளை உருவாக்க ஜியாலஜிஸ்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

சமீபத்தில், இதேபோல வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மணிப்பூரில் 8 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அருணாசல பிரதேசத்தில் நேற்று மதியம் 2.53 மணியளவின் நிலநடுக்கம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து கமெங் மாவட்டத்தில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் உறங்கிக் கொண்டு இருந்த மக்கள் பீதியடைந்து தெருவுக்கு ஓடி வந்தனர். ஆனால் இதனால் உயிர்சேதமோ, கட்டடங்களுக்கு பாதிப்போ ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்ராவின் பால்காரில் இன்று காலை 9.17 மணிக்கு 3.5 ரிக்டர் அளவு நில நடுக்கம் பதிவானது.

அடுத்த செய்தி